Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி வேண்டும்! – திருமாவளவன் கோரிக்கை!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (13:35 IST)
தமிழகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திற்கென பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் மொழிவாரியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் பிரிக்கப்பட்ட நாளை மாநிலங்களின் பிறந்தநாளாக அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. நவம்பர் 1அன்று இந்த மாநிலங்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ” தென்னிந்திய மாநிலங்கள், மாநிலம் பிறந்தநாளை பூரிப்போடு கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் தனி மாநிலக் கொடி ஏற்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். எனவே தமிழக அரசு இந்த நாளை கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தமிழகத்திற்கும் பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments