Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டம் – சிதம்பரம் தொகுதியில் திருமா ?

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (16:22 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. திமுக தனது தேர்தல் பேச்சுவார்த்தை அணியை உருவாக்கிக் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு விருப்பமானத் தொகுதிகள் மற்றும் அவற்றில் வெற்றி வாய்ப்புக்கள் குறித்து திமுக வோடுக் கலந்தாலோசித்து வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஊடகங்களிடம் பேசினார். அப்போது ‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதி எனது சொந்த தொகுதி. அங்கு எனக்கான வாக்குகளும் அதிகம். இது குறித்துக் கூட்டணிக் கட்சிகளிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன். நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து அதைக் கூட்டணிக் கட்சிகளிடம் கொடுப்போம். அதன் பின் போட்டியிடும் தொகுதிக் குறித்து முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments