Publish Date: Sat, 22 May 2021 (15:31 IST)
Updated Date: Sat, 22 May 2021 (15:33 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களாக நான்கு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர் நடவடிக்கைகளால் பாதிப்புகள் சில மாநிலங்களில் குறைந்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இன்னும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை, சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இப்போது கோவை, திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.