Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான்: முன்னாள் திமுக அமைச்சர்

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (12:53 IST)
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் மறைந்ததில் இருந்து தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பிவிட்டதாக அதிமுகவினர்களும், முக ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் வேறுபாடு இன்று ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் ’ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவரின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார். முக அழகிரியின் இந்த கருத்து முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments