Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸ் சோதனை

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (17:41 IST)
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாணவிகளை டிரெக்கிங் அழைத்து சென்றதே உயிர்ப்பலிக்கு காரணம் என துணை முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப், வனத்துறையின் அனுமதி பெற்றே டிரெக்கிங் அழைத்து சென்றதாக கூறியது

இந்த நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் பாலவாக்கம் வீடு மற்றும் அலுவலகத்தில் சற்றுமுன் தேனி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனை குறித்து காவல்துறையினர்  வேறுஎந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments