Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்ட நிர்வாகிகளே ஈபிஎஸ்-க்கு ஆதரவு!

EPS
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:58 IST)
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிபழனிசாமி ஆதரவாக இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் எடப்பாடிபழனிசாமி அதில் முந்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தேனி மாவட்ட நிர்வாகிகளே அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதூறாக பேசினா அப்படிதான் அபராதம் போடுவோம்! – கூகிளுக்கு மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பு!