Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு அதிகார ஆசையில்லை, ஆனால் என்னை ஓரம்கட்ட முடியாது: ஓபிஎஸ்

Advertiesment
ops
, வியாழன், 16 ஜூன் 2022 (20:25 IST)
எனக்கு அதிகார ஆசை இல்லை ஆனால் அதே நேரத்தில் என்னை கட்சியிலிருந்து ஓரம் கட்ட முடியாது என ஓ பன்னீர்செல்வம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சற்று முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் அதிமுகவில் என்னை ஓரம் கட்ட முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த வித அதிகார ஆசையும் நான் கொண்டவன் இல்லை என்றும் தெரிவித்தார் 
 
தொடர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது என்றும் தொண்டர்களை காப்பாற்றவே நான் பொறுப்பில் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்
 
முதல்வராக இருந்தபோதும் சரி ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும் சரி ஒரு சாதாரண தொண்டனாக இருக்கிறேன் என்றும் அவர் கூறினார் 
 
ஒற்றை தலைமை பேச்சு ஏன் உருவானது என்றே தெரியவில்லை என்றும் நானும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?