Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷா மையத்தில் திருட்டு- 2 ஊழியர்கள் கைது

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (13:50 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்தில் மின்சார சாதனங்கள் திருடப்பட்டதாக அளித்த  புகாரில் ஊழியர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடம் ஈஷா யோக மையம். இந்த மையத்தின் ஸ்டோர் பொறுப்பாளராக சச்சிதானந்தன் இருந்த நிலையில், இவர் அங்கு பணியாற்றும் 21 ஊழியர்கள் மூலம் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஈஷா மையம் சார்பில் இவர்கள் 22 பேர் மீது  நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தன் மற்றும் ஊழியர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments