Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியேட்டர் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு!!

தியேட்டர் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு!!
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (08:40 IST)
திரையரங்கு உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலேயே கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மாதம் முழுவதும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
 
அதன்படி தற்போது தியேட்டர்களை திறக்க பரிந்துரை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். 110 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் தியேட்டர்களின் உரிமையாளர்கள் நேரில் கோரிக்கை விடுத்தனர். 
 
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின்பு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க ராணுவம் காபூலில் நிற்கும் - பைடன் அதிரடி!