Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16.36 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி

16.36 லட்சம் பேருக்கு  தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் சார்பில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 
 
மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி சமீபத்தில் துவங்கப்பட்ட நிலையில் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை தனியார் மருத்துவமனைகளில் 16.36 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா அதிகரிப்பு: கோவையில் முக்கிய இடங்களில் டாஸ்மாக் மூடல்!