Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:29 IST)
திருபுவனையைச் சேர்ந்த மாணவியை காதலிக்க மறுத்ததால்,  வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனையில் உள்ள சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்தனா, அங்குள்ள அரசுக் கலைக்கல்லூரியில் பீ காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகளான ரத்தினவேல் கீர்த்தனாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ரத்தினவேலின் காதலை கீர்த்தனா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. தன்னைக் காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் ரத்தினவேல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments