Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

Advertiesment
Karur

Prasanth Karthick

, திங்கள், 2 ஜூன் 2025 (09:19 IST)

கரூர் அருகே மனைவி வேறு நபருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த கணவன், கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அம்சா. ரமேஷ் கரூரில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகே மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

 

அண்டை வீடு என்பதால் சிவக்குமார் அடிக்கடி அம்சாவுடன் பேசிப் பழகி வந்த நிலையில், இந்த உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் பணி முடிந்து வீடு திரும்பியபோது தனது மனைவி அம்சா, பக்கத்து வீட்டு சிவக்குமாருடன் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ் சிவக்குமாரை கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரமேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!