Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கறுப்பு நிறமாக வந்த தண்ணீர் ! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

கறுப்பு நிறமாக வந்த தண்ணீர் ! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்
, புதன், 10 ஜூலை 2019 (21:03 IST)
கோடை காலம் வந்ததே வந்தது, தமிழ்நாட்டில் தீராத வறட்சியை உண்டுபண்ணிவிட்டது. மக்களும் குடி தண்ணீருக்காக பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
தற்போது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் நதியில்   தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரானது கோவையில் உள்ள பெருங் குளங்களில் வாய்க்கால்கள் மூலமாகச் சேகரிக்கப்படுகிறது.
 
இந்நிலையில்  கோவைப் பகுதிகளில் உள்ள புறநகர் பகுதிக்கு செல்லும் நொய்யல் நதி தண்ணீரில் சாக்கடை கழிவுநீரும், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகளும் கலந்து கொண்டு வருகின்றன.இந்த தண்ணீரை கோவைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  நொய்யல் நதி நீரானது  தண்ணீர் பட்டணம்புதூரை கடந்து வந்தபோது, தீடீரென்று அது கறுப்பாக நிறம் மாறியது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பொதுமக்களுக்கு செல்லுல் நீரில் இந்த மாதிரி சாயகழிவு நீரும், தொழிற்சாலைகளும் கலந்தால். அதைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாற்றம் தரும் முடிவு: இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி