Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி காக்க வேண்டும் - போப் ஆண்டவர் அறிவுரை !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:07 IST)
உலகில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும், அதிக எண்ணெய் வயல்களைக் கொண்ட பாரசீக வளைகுடா நாடான ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில், ஈரான் நாட்டில் இரண்டாம் நிலை தலைவரும் ராணுவ தளபதியுமான சுலைமான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மூலம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
இதற்கு ஈரான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. அங்குள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவை பழிவாங்குவதாகவும் அறிவித்தது.
 
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஈரான் மீது போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறிய நிலையில், அந்நாட்டு செனெட் சபை அதற்கு வழங்காது என்பதால் இந்த விவகாரத்தை அமைதியைக் கடைபிடிப்பதாகக் கூறினார்.
 
இந்நிலையில்,  இரு நாடுகளின் போக்கினால் உலக நாடுகளிடையே பதற்றம் அடைந்துள்ளன.
 
இந்நிலையில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :  சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்க்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments