Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை அடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (15:51 IST)
ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு அந்தத் தேர்தலும் நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகளும் சமீபத்தில் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது என அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை அடுத்து தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுக்கள் ஜனவரி 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், ஜனவரி 29ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குப்பதிவு பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அதன் மறு நாளான பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 இதனை அடுத்து இந்த தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments