Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவரிங் நகையை புதையல் என ஏமாற்றிய கும்பல் – உஷாரான ஹோட்டல்காரர்!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (17:47 IST)
சென்னையில் கவரிங் நகைகளை புதையல் என ஏமாற்றி விற்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் சசிகுமார். அவரது கடைக்கு உணவருந்த வந்த பீம் பிரகாஷ் என்பவர் தான் ஒரு பொக்லைன் ஆபரேட்டர் என்று கூறி சசிக்குமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தான் கர்நாடகாவில் வேலை பார்த்ததாகவும் அங்கே பொக்லைன் மூலம் தோண்டும் போது ஒரு இடத்தில் புதையல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். தனக்கு யாரையும் தெரியாததால் அதை விற்று தர உதவும்படி சசிக்குமாரிடம் கூறியுள்ளார்.

சசிக்குமாரும் புதையலை எடுத்து வரும்படி கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து ஹரிஸ் என்பவருடன் வந்த பீம் பிரகாஷ் பழக்கால நகைகள் என கவரிங் நகைகளை சசிக்குமாரிடம் கொடுத்து பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த சசி குமார் போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளார். உடனே அங்கு விரைந்த போலீஸார் பீம் பிரகாஷையும், ஹரிஸையும் கைது செய்துள்ளனர்.

புதையல் என கூறி கவரிங் நகைகளை விற்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments