Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்டனுக்கு வந்த போன் கால்; மயங்கி விழுந்த ஜெ.: பரபரப்பு தகவல்!

கார்டனுக்கு வந்த போன் கால்; மயங்கி விழுந்த ஜெ.: பரபரப்பு தகவல்!

கார்டனுக்கு வந்த போன் கால்; மயங்கி விழுந்த ஜெ.: பரபரப்பு தகவல்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு போன்ற காரணங்கள் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.


 
 
ஆனால் நேற்று இரவு முதல்வருக்கு திடீரென்று சர்க்கரையின் அளவு அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவுக்கு டெல்லியில் இருந்து வந்த போன் கால்கள் தான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
நேற்று போயஸ் கார்டனில் நடந்த விவாதங்கள் தான் ஜெயலலிதாவை மயக்கமடைய வைத்துள்ளது. நேற்று இரவு டெல்லியில் இருந்து சில தொலைபேசி அழைப்புகள் ஜெயலலிதாவுக்கு வந்துள்ளது.
 
அந்த தகவல்களைக் கேட்ட பின்னர் ஜெயலலிதா மிகவும் சோர்வடைந்துள்ளார். பின்னர் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலா மற்றும் அரசு செயலாளர்களுடன் விவாதித்து கொண்டிருந்திருக்கிறார். இந்த விவாதத்தின் போது மன அழுதத்துடன் பேசிய ஜெயலலிதா மயங்கியதாக கூறப்படுகிறது.
 
இதனால் பதறிய சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டெல்லியில் இருந்து வந்த தகவல் என்னவென்ற விபரம் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலைப் புலிகள் 6 பேர் சுட்டுக்கொலை