Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை!- முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
stalin
, வியாழன், 27 அக்டோபர் 2022 (15:15 IST)
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள   அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனால்  வழங்கப்பட்டு, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள   பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்றுதிறந்து வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கார் படம் வேண்டும்! – காங்கிரஸ் எம்.பி கருத்து!