Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானைவியை தூக்கித்.... தடுப்பூசி போடச் சென்ற முதியவர்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (00:11 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு முதியவர் தடுப்பூசி போடுவதற்காகத் தனது மனைவியைத் தூக்கிக்  கொண்டு சென்றுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது.

கோவை துடியலூரைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மனைவியைத் தூக்கிக் கொண்டு கொரோனா தடுப்பூசி போடுவதற்காகச் சென்றார். இந்தக் காட்சி காண்போரை நெகிழச் செய்தது. இந்த வயதிலும் அன்புகொண்டு ஒற்றுமையாக இருக்கும் தம்பதியை எல்லோரும் வாழ்த்தி, முதியவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments