Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகேஷ் அம்பானியை முந்திய தமிழர் ! எதில் தெரியுமா ?

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (20:58 IST)
நாட்டில் அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர்களில் ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். 
ஹெசிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நடார் ஒரு தமிழர். இவர் சமுதாயத்தில்  ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அதிகளவில் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் ரூ. 826 கோடிகள் சமூக பணிகளுக்காக நன்கொடை கொடுத்துள்ளார் ஷிவ்நாடார்.கம்பெனிகள் சட்டத்தின் படி கார்பரேட் நிறுவங்கள் தங்களின் வருவாயில் 2 % சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட வேண்டுமெனபது விதி. இந்நிலையில் நாட்டில் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷிவ்நாடார் வேறு யாரையும் விட அதிகளவில் நன்கொடை கொடுத்துள்ளார்.

இதற்கடுத்து விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ரூ. 453 கோடி நன்கொடை வழங்கி இரண்டாம் இடத்தில் உள்ளார். நாட்டில் முதல் இடத்தில் உள்ள கோடிஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானி ரூ. 402 கோடி நன்கொடை கொடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
 
ஷிவ்நாடார் , ரூ 15 கோடி கொடுத்து, தமிழகத்தில் தான் படித்த பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையான வசதிகள் செய்து கொடுத்துள்ளது பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments