Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

Prasanth Karthick
திங்கள், 11 நவம்பர் 2024 (10:00 IST)

தனது இரண்டாவது மனைவியை கொன்று வீசிவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருவண்ணாமலை கோபுரத்தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவரான கோபிக்கு முன்னதாக ஒரு திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கோபிக்கும் திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த சில காலமாகவே கோபிக்கும், சரண்யாவுக்கு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சரண்யாவை கோபி கொலை செய்துள்ளார். பின்னர் சரண்யாவின் உடலை 8 துண்டுகளாக வெட்டி நண்பர் ஒருவரின் உதவியுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார்.
 

ALSO READ: இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!
 

பின்னர் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம், சரண்யா தீபாவளிக்காக அரசுடையான்பட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். 4 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்த கோபி, தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

ஆனால் போலீஸார் விசாரணையில் சரண்யா அரசுடையான்பட்டுக்கு வரவே இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் கோபி மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரை விசாரிக்க சென்றபோது அவர் தப்பி தலைமறைவாகியுள்ளார். கோபியின் தாயார் சிவகாமியிடம் போலீஸார் விசாரித்தபோது சரண்யா கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான கோபியையும் கைது செய்து சூளகிரி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சரண்யாவின் உடல் பாகங்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments