Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

Siva
திங்கள், 11 நவம்பர் 2024 (09:54 IST)
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Self Baggage Drop வசதியின் செயல்பாடு என்ற வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பார்க்கலாம்.

பயணிகள் தானியங்கி இயந்திரத்தில் தங்களின் PNR எண்ணை பதிவு செய்து, போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ள முடியும். அதன் பிறகு, அந்த போர்டிங் பாஸை மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அதில் எந்நெற்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று விவரங்கள் தோன்றும். பின்பு, அதில் "OK" கொடுத்து உடைமைகளின் எண்ணிக்கை குறித்து பதிவிட வேண்டும்.

அப்போது உடைமைகளின் மொத்த எடை ஸ்கிரீனில் தோன்றும். அதன் பிறகு, உடைமைகளில் ஒட்டிக்கொள்வதற்கான Tag-கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். அந்த Tag-ஐ நாமே ஒட்டி, உடைமைகளை கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால், அவை விமானத்தில் ஏற்றப்படுவதற்குத் தயாராகி விடும்.

இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments