Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விறுவிறுப்பாக நடந்த ஃபார்முலா ரேஸ் பந்தயம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Formula Race

Prasanth Karthick

, ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (08:35 IST)

உலக பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

 

சென்னையில் உலக பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இதற்காக சாலைகளை தயார் படுத்தும் பணி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று இரவு ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெற்ற நிலையில், அதை கண்டு களிக்க ஏராளமான மக்கள் அப்பகுதிகளில் குவிந்தனர்.

 

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா 4 ரேஸை தொடங்கி வைத்தார். முன்னதாக மக்களை மகிழ்விக்கும்படியாக கார்களின் சாகச பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சென்னையில் சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

பார்முலா 4 கார் பந்தயத்தின் தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ள நிலையில், இன்றும் மக்கள் அதிகமாக வருகை தர உள்ளதால் கார் ரேஸ் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னையை விட கூடுதல் லாபம் தரும் ஜாதிக்காய்!