Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி – மு.க.ஸ்டாலின்

அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி – மு.க.ஸ்டாலின்
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (22:13 IST)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் சட்டமன்றத்  தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

எப்போதும் போலவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்கள் நாள்தோறும் வெளியாகிறது

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! கோவை வேலுமணியின் குத்தகை பூமியா? கமிஷனுக்காக தேவையில்லாத இடங்களிலும் பாலம் கட்டுகிறது @CMOTamilNadu @SPVelumanicbe கூட்டணி!

அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் உறுதியளித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் அல்லது அமைச்சர்கள் பதிலடி கொடுப்பார்கள் என தெரிகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து!