Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ பற்றியது: பயணிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 13 மே 2019 (17:48 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நிறைய குப்பைகள் நிரம்பி உள்ளது. இன்று பிற்பகலில் திடீரென அந்த குப்பைகளில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். திடீரென்று ஏற்பட்ட தீயால் கோயம்பேடு பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
 
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments