Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடும் தந்தை: மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (18:20 IST)
உயிருக்குப் போராடும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற, மருத்துவமனையில் மகன் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 


 
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சுதேஷ் .  சரக்கு ரயில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த சுதேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், உயிருக்கு போராடும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய மகன் சதீஷ், தான் காதலித்து வந்த சித்ரா என்ற பெண்ணை மணமுடிக்க முடிவு செய்தார்.
 
இதையடுத்து இருவீட்டாரின் ஒப்புதலுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர் முன்னிலையில் சித்ராவை சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.
 
மணமக்கள் ஜோடியாக சென்று படுக்கையில் இருந்த தந்தையிடம் ஆசி பெற்றனர். தமது தந்தை விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சதீஷ் கண்ணீர் மல்க கூறினார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments