Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிளகாய் பொடியைத் தூவி மருமகனை வெட்டிக் கொல்ல முயன்ற மாமனார்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:01 IST)
காதல் திருமணத்தில், பெண் வீட்டார், மிளகாய்  பொடியைத் தூவி  மருமகனை வெட்டிக் கொல்ல முயற்சி செய்த நிலையில், படுகாயங்களுடன் மருமகன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் திகினார் கிராமத்தில் வசிப்பவர் விக்னேஷ் கார்த்திக். இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த  மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் நடைபெற்ற நிலையில், ஜோதியின் பெற்றொர் கோபத்தில்  இருந்தனர்.

நேற்றிரவு  ஜோதியின் அப்பா பால்ராஜ், அவரது அம்மா துளசியம்மான் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் விக்னேஷ் கார்த்தியின் வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது, விக்னேஷ் கார்த்தியின் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

கதறல் சப்தம்  கேட்டு அருகிலுள்ளோர் சம்பவ இடத்திற்கு வரவே அங்கிருந்து 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.

விக்னேஷ் கார்த்தி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரும் தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடித்து விடுவதாகவும்  போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments