Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பிணி காதலியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, கிணற்றில் வீசிய காதலன்

Erode
, சனி, 1 ஏப்ரல் 2023 (13:44 IST)
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் காதலியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, காதலன் கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி ஸ்வேதா, அதேகல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த லோகேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமான நிலையில், ஸ்வேதா கர்ப்பமாகியுள்ளார். அப்போது, லோகேஷ் ஸ்வேதாவை கைவிட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதுபற்றி ஸ்வேதா, அவரிடம் நியாயம் கேட்கச் சென்றபோது அவருக்கு உணவு வாங்க லோகேஷ் வெளியே சென்றார். அந்த நேரத்தில் ஸ்வேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த லோகேஷ், ஸ்வேதாவின் சடலத்தை மூட்டைகட்டி அங்குள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளார்.

இதுகுறித்து, பெற்றோர் போலீஸில் புகாரளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, இதுபற்றி அறிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது லோகேசை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழிப்பறி திருட்டில் மீட்கப்பட்ட ரூ 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்!