Publish Date: Sat, 13 Jul 2019 (15:39 IST)
Updated Date: Sat, 13 Jul 2019 (15:45 IST)
புதிய தேசியக் கல்விக்கொள்கையை நடித்த சூர்யா விமர்சித்துள்ளார். மேலும் அவர் மேடையில் பேசும் போது, ஒரு தவறாம வார்த்தையை பயன்படுத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் 20 மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசன் சார்பில் தலா 10. ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வடபழனியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கல்வியாளர் வசந்தி தேவி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார். இதில் ஒரு வார்த்தையை அவர் தவறான பயன்படுத்தி விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.