Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா-ஸ்ரீதேவி மரணங்கள்: சில ஒற்றுமைகளும், விசாரணையில் சில வேற்றுமைகளும்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (04:19 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடந்த வாரம் சனிக்கிழமை மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

1. இருவருமே மாரடைப்பில் இறந்ததாக கூறப்பட்டது.

2. மரணத்திற்கு பின்னர் இருவரது உடல்களும் என்பார்மிங் செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை விசாரணை செய்யாமலேயே என்பார்மிங் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி மரணம் குறித்து துபாய் போலிசார் தீவிர விசாரணை செய்து, அந்த மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே என்பார்மிங் செய்யப்பட்டது. ஏனெனில் என்பார்மிங் செய்யப்பட்ட பின்னர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது

3. ஜெயலலிதா உடல் என்பார்மிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பொதுவாக இறப்புக்கு ஒருவரது உடல் பின் விமானம் அல்லது கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் மட்டுமே என்பார்மிங் செய்யப்படும். ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே என்பார்மிங் செய்யப்பட்டது.

4. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சிசிடிவி மாயமாகிவிட்டது. ஆனால் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறையின் சிசிடிவி வீடியோ முழுவதும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டது.

5. முழு விசாரணையும் முடிந்த பின்னரே ஸ்ரீதேவி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவித விசாரணையும் இன்றி அவசர அவசரமாக ஜெயலலிதா உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அவரது மறைவிற்கு ஒருவருடம் கழித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments