Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களுக்கு திருநாள்! - மகனை வாழ்த்தி ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி!

Prasanth K
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:25 IST)

இன்று மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய், விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். அதை தொடர்ந்து இன்று மதுரையில் இரண்டாவது மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவு முதலே ஏராளமான தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்தியுள்ளார். அதில் அவர் “திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி, தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்.

 

தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு.. நேர்மையான தலைவன் என்பதற்கு நிதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை. வாழ்த்துக்கள் விஜய்” என வாழ்த்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments