Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தை! – வீடியோவை ஷேர் செய்து இயக்குனர் மோகன்.ஜி முதல்வருக்கு கோரிக்கை!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (12:43 IST)
சமீபமாக ஸ்மோக் பிஸ்கட் கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து இயக்குனர் மோகன்.ஜி பகிர்ந்துள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாடு முழுவதும் பலவகை உணவுகள் ட்ரெண்டிங் ஆகும் நிலையில் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. சமீபத்தில் நாடு முழுவதும் பல பகுதிகளில் சவர்மா சாப்பிட்டு குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து சவர்மா கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதுபோல பஞ்சு மிட்டாயில் ரோஸ் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரசாயனம் சேர்ப்பது தடை செய்யப்பட்டது. அந்த வகையில் சிறுவர்களிடையே பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்து வாயில் போடப்படும் பிஸ்கட்டுகளில் இருந்து எழும் புகையை கண்டு சிறுவர்கள் பலரும் அந்த பிஸ்கட்டுகளை சுவைக்க விரும்புகின்றனர். சமீபமாக திருவிழாக்கடைகள், கண்காட்சிகளிலும் இந்த ஸ்மோக் பிஸ்கட் ஸ்டால்களை காண முடிகிறது.

ALSO READ: வீகன் டயட் விபரீதம்! பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை!

இந்நிலையில் தற்போது தமிழில் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கமடையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதை பகிர்ந்துள்ள அவர் “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments