Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவையொட்டி நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் !

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவையொட்டி   நேரில் சென்று  ஆறுதல் கூறிய முதல்வர் !
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (21:42 IST)
சாணக்யா என்ற  ஊடகத்தின் சி.இ.ஓவும், பத்திரிக்கையாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஊவே.,ரகுநாதாச்சாரியார் (84) வயது மூப்பில் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  நேற்றிரவு காலமானார்.

அவரது மறைவுக்கு பிரபல பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலவர் முக ஸ்டாலின்  ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகு நாதாச்சார்யாவின் மறைவையொட்டி அவரது வீட்டிற்குச் சென்று  அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து, ரகு நாதாச்சார்யாவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இன்று மதியம், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று  அவரது இல்லத்திற்கு நேரில் சென்று  அவரது உடலுகு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச்சூடு - 19 பேர் பலி