Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபான ஆலையில் ரூ. 500 கோடி இழப்பு: சிபிஐ விசாரணை வேண்டும் – அதிமுக

மதுபான ஆலையில் ரூ. 500 கோடி இழப்பு: சிபிஐ விசாரணை வேண்டும் – அதிமுக
, சனி, 20 ஜூன் 2020 (22:56 IST)
புதுச்சேரி மதுபான தொழிற்சாலையில் நடைபெற்ற மோசடியை சிபிஐ விசாரிக்க வேண்டும்  என்று அம்மாநில அதிமுக கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 7 மதுபான தொழிற்சாலையில் உள்ள நிலையில் இங்கு ஒரு மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டால் அவரை எங்கே, எப்போது விநியோகிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கம் அடங்கிய ஹலோகிராம் ஒட்டப்படுவது வழக்கம்.

இந்நிலையில் மங்கலம் என்ற கிராமத்தில் போலியான ஹலோகிராம் தயார் செய்து வந்த நிலையில் போலீஸார் அதைக் கண்டறிந்து ஆலைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோல் பல ஆலைகலில் சுமார் ரூ. 500 கோடி அளவுக்கு  முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனவும் இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசு துணையிருப்பாதாகவும் கூறி இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பிபினர் ( அதிமுக) துணை நிலை ஆளுநர்  மாளிகையில் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடுகளுக்கே சென்று மதுபானம் விநியோகம்... பிரபல நிறுவனங்களுக்கு போட்டியாக Amazon !