Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் கொள்ளையர்களை சேசிங் செய்த தாசில்தார் பரிதாப பலி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (10:09 IST)
மணல் கொள்ளையர்களை சேசிங் செய்த போது தாசில்தார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மணல் கொள்ளை ஒரு தீராத பிரச்சனை. அரசியல்வாதிகளின் துணையோடு இந்த மணல் கொள்ளை நடைபெறுவது தான் கொடுமையே. மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற பல அதிகாரிகள் மணல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்களையும் நாம் அன்றாடம் கேள்வி படுகிறோம்,
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காட்டாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த பார்த்திபனைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க அசுர வேகத்தில் சேசிங் செய்தார் பார்த்திபன். அப்போது திடீரென காரின் டயர் வெடித்து, அருகிலிருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலே பலியாக அவருடன் சென்ற மற்ற 3 அதிகாரிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருடர்களை பிடிக்க சென்ற தாசில்தார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments