Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பெண் பயணி காயம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (09:57 IST)
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments