கோலாகலமாக தொடங்கிய தஞ்சாவூர் சித்திரை தேரோட்டம்! – குவிந்த பக்தர்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:29 IST)
புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருத்தேர் ஊர்வலம் நடைபெறாத நிலையில் இந்த முறை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த மார்ச் 30ம் தேதி கொடியேற்றி சித்திரை திருவிழா தொடங்கப்பட்ட நிலையில், இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் ஊர்வலம் தொடங்கியுள்ளது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், அவரை தொடரந்து சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் செல்கின்றனர்.

இந்த தேர் ஊர்வலத்தை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டுள்ள நிலையில், பலர் ஆர்வமுடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments