Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் ஆட்சியை கலைக்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓபிஎஸ்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (20:06 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் நேரம் கேட்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தாலும் இரு அணி தலைவர்களிடையே பழைய மனக்கசப்பு இருப்பதாக அவ்வப்போது அரசியல் வதந்திகள் எழுவதுண்டு.

இந்த நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், 'எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் நேரம் கேட்டதாக கூறியுள்ளார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒற்றுமையை குலைக்க சதியா? அல்லது உண்மையிலேயே ஓபிஎஸ் நேரம் கேட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments