Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்வீர்ஷாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:53 IST)
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவை இன்னும் கைது செய்யும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. சிலைகளை அவர் சிலைக்கடத்தல் பேர்வழிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் சிலைக்கடத்தல்காரர்களை போலீசார் உதவியுடன் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு தேடி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியூள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments