Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் போட்டி நடத்தக்கூடாது ; வீரர்களை சிறைபிடிப்போம் : தமிமுன் அன்சாரி

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:13 IST)
நாளை சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றால், மைதானத்தில் நுழைந்து கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என ஆளுங்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
 
இந்நிலையில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுங்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி “ திமுக சார்பில் நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கு பெறுவோம். சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். மீறி நடத்தினால், மனிதநேய ஜனநாயகக் கட்சியினரும், காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் மைதானத்தில் நுழைந்து போட்டியை நிறுத்துவோம். அதன் பிறகும் போட்டி தொடர்ந்தால், ஐபிஎல் வீரர்களை சிறை பிடிப்போம்” என அதிரடியாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments