Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு!!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (14:00 IST)
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. 

 
பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒரு சில பொருட்களுக்கான வரி குறைப்பு, ஜவுளிக்கான வரி உயர்வு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை தள்ளிவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%ல் இருந்து 12% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments