Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:31 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (04.07.2022) முதல் நாளை மறுநாள் (06.07.2022) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments