பயணிகளின் உயிரை பறிக்கும் அரசு; விபத்தில் ஒருவர் பலி

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (14:31 IST)
விருதாச்சலம் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார்.

 
போக்குவரத்து உழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், அரசு தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் என்று தெரிவித்து இருந்தார்.
 
 
ஆங்காங்கே பேருந்துகள் விபத்துள்ளாவது நடந்து வருகிறது. இந்நிலையில் விருதாச்சலம் அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி மற்றிம் சாமுவேல் என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்கி வரும் அரசு பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments