Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி மழையெல்லாம் கிடையாது.. மீண்டும் அதிகரிக்கும் வெப்பம்: வானிலை அறிவிப்பு..!

Advertiesment
Tamil Nadu

Siva

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (08:52 IST)
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
நாளை முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை, மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பம் சராசரியைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெப்பம் 98 டிகிரி பாரன்ஹீட் வரை நிலவக்கூடும்.
 
இதற்கிடையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
ஆனால், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள்  மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பது, சில இடங்களில் மிதமான மழை, மற்றும் கடற்பகுதிகளில் பலத்த காற்று என பல்வேறு விதமான வானிலைகள் அடுத்த சில நாட்களுக்கு நிலவக்கூடும் எனத் தெரிகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையோரங்களில் சிதறி கிடந்த நாய்களின் உடல்கள்.. விஷம் வைத்து கொல்லப்பட்டதா?