Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம்: அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம்: அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
, திங்கள், 7 அக்டோபர் 2019 (08:26 IST)
உலகிலேயே மூத்த மொழி தமிழ்தான் என்பது கீழடியில் கிடைத்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் மெய்ப்பித்து வருவதால் தமிழ் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் உலகில் தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம் என தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  அமைச்சர் பாண்டியராஜன்பேசியதாவது:

webdunia
தமிழ், தெலுங்கு சமுதாயத்திற்கு இடையேயான பிணைப்பு குறைந்துள்ளது என்றும், உலகம் முழுவதும் தமிழை விட, தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி மக்கள், அதிகம் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார். தெலுங்கானா தமிழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தெலுங்கு மொழி இரண்டு மாநிலங்களில் பேசப்பட்டு வந்தாலும் உலகின் பல நாடுகளில் பேசப்பட்டு வரும் தமிழைவிட தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி பேர் அதிகம் பேசுவதாக அமைச்சர் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக ஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டார்: அமைச்சர் செல்லூர் ராஜூ