Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 வயது சிறுமி கர்ப்பம்.. கர்ப்பத்திற்கு காரணமான 18 வயது இளைஞர் கைது..!

Advertiesment
காங்கேயம்

Mahendran

, புதன், 3 செப்டம்பர் 2025 (17:11 IST)
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காங்கேயம் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரும், 17 வயது சிறுமி ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலின் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமானார்.
 
சிறுமி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்ஸோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அந்த இளைஞரை கைது செய்து, நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
சிறுமி கர்ப்பமான விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்ஸோ சட்டம் என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் ஒரு கடுமையான சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வயது வித்தியாசமின்றி கைது செய்யப்படுவார்கள்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் பக்கம்தான் நாங்கள் இருப்போம்: ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் உறுதி