Publish Date: Wed, 11 May 2022 (23:29 IST)
Updated Date: Wed, 11 May 2022 (23:32 IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு 15 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல் அந்த நாட்களில் பணிக்கு வந்து, அதற்காக ஊதியத் தொகையைப் பணமாகப் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ் நாடு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.