Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8ம் வகுப்பு மாணவியை கடத்திய ஆசிரியர்! – தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!

8ம் வகுப்பு மாணவியை கடத்திய ஆசிரியர்! – தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!
, வியாழன், 26 மே 2022 (17:20 IST)
தர்மபுரியில் 8ம் வகுப்பு மாணவியை பள்ளி ஆசிரியரே கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக முபாரக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் சொல்லி இரு சக்கர வாகனத்தில் முபாரக் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸார் முபாரக் அயோத்திப்பட்டினம் பகுதியில் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். அவரை மொரப்பூரில் வைத்து கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பள்ளி மாணவியை ஆசிரியரே கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்