Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரத்தை மது அருந்தி மகிழ்ந்த மதுப்பிரியர்கள்! – ஒருநாள் டாஸ்மாக் கலெக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
நேற்று சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் 14ம் தேதி அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது.

நேற்று ஆகஸ்டு 15ல் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் அதிகளவில் மது வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.

இதனால் நேற்று முன்தினம் ஆகஸ்டு 14 அன்று ஒருநாளில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
மண்டலவாரியாக மதுரையில் அதிகபட்சமாக ரூ.58.26 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னையில் ரூ.55.77 கோடிக்கும், சேலத்தில் ரூ.54.12 கோடிக்கும், திருச்சியில் ரூ.53.48 கோடிக்கும், கோவையில் ரூ.52.29 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments