Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

Advertiesment
cm stalin
, திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (09:48 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 
 
இன்று 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின் அவர் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி தற்போது 31 சதவீதம் என்று இருக்கும் நிலையில் இனி 34 சதவீதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 15 சுதந்திரம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இன்னும் சில நாடுகள்!!